பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி

பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி

இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. ஆனால் அறிவியலைப் பொறுத்தவரையில் நம்பிக்கையின் அடிப்படையில் எதுவுமே முடிவு செய்யப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.

கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்

கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நியூட்ரான் விண்மீன்கள் மிகுந்த காந்தப்புலத்தை கொண்டவை, சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் அதிகூடிய காந்தப்புலத்தை கொண்ட அமைப்பாக இந்த நியூட்ரான் விண்மீன்களே காணப்படுகின்றன. அதிலும் மக்னட்டார் (Magnetar) எனப்படும் நியூட்ரான் விண்மீன்கள் பூமியின் காந்தப்புலத்தைப்போல குவார்ட்ட்ரில்லியன் மடங்கு (குவார்ட்ட்ரில்லியன் என்பது, 1 இற்குப் பின்னால் 15 பூஜியங்கள் வரும் இலக்கம்!) அதிகமான காந்தபுலத்தை கொண்டுள்ளன.

ஏன் இந்த நியூட்ரான் விண்மீன்கள் இப்படி அதிகூடிய காந்தப்புலத்தை கொண்டுள்ளன என்று பார்க்கலாம்.

பூமியைப் போலவே பல கோள்கள்

பூமியைப் போலவே பல கோள்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானவை நமது வியாழனைப் போல மிகப்பெரிய கோள்கள். அனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், பிற விண்மீன்களை சுற்றிவரும் பூமியைப்போல சிறிய கோள்களையும் கண்டறிய வழிவகுத்தன. இன்று நமக்கு பூமியின் அளவில் உள்ள கோள்கள், மற்றும் பூமியை விட சில மடங்குகள் மட்டுமே பெரிய கோள்கள் நூற்றுக்கணக்கில் தெரியும்!

விபுலாநந்தம் – தெய்வீகம்

விபுலாநந்தம் – தெய்வீகம்

காரேறுமூதூர்க் களக்கொழுந்தே, நாம் வாழும் கிழக்குதித்த ஞான சூரியனே உலகிற்கு தமிழ் ஒளி பரப்ப இங்குதித்த உத்தமனே வாழ்க.

குழந்தைப் புலவனாக, ஈழத்தின் முதல் தமிழ் பண்டிதனாக பயிற்றப்பட்ட ஆசிரியனாக, விஞ்ஞான பட்டதாரியாக, பன்மொழி புலவனாக மூவாசையும் துறந்தோனாக, ஆராய்வளனாக, தமிழர் மனதிலெல்லாம் பதிந்த அறிஞர்க்கு அறிஞனாக நமது முதுசமாக தமிழ் முனிவனாக, எவ்வாறு உயர்ந்தான் விபுலாநந்தன் எனும் பேராசான். அது திருவருளே அன்றி வேறில்லை.

“கண்ணாமூச்சி ரே…… ரே………”

“கண்ணாமூச்சி ரே…… ரே………”

 

“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே பல்கலைக்கழகம் பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி. உழைப்பிற்கேற்ற பலனும் கிடைத்தது.

“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. அதாவது நாமும் வாழ்ந்து, நம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைப்போம் என்பதாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது.

கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

இயற்கையின் விநோதங்களில் கருந்துளையைப் போலவே, இன்னொரு முடிவில் தொக்கி நிற்பது இந்த நியூட்ரான் விண்மீன்கள். சூரியனை விட பெரிய விண்மீன்கள், கிட்டத்தட்ட அந்த விண்மீன்களின் மையப்பகுதி, நமது சூரியனைப்போல 1.4 தொடக்கம் 3 மடங்கு திணிவுள்ளதாய் அமையும்போது, அதனது எரிபொருளை முடித்துக்கொண்டு மீயோளிர் விண்மீன் பெருவெடிப்பாக (சூப்பர்நோவா) சிதற, அதன் மையப்பகுதியில் எஞ்சி இருப்பது இந்த நியூட்ரான் விண்மீனாகும்.

மனதை வெல்

மனதை வெல்

ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தினான். மிகத்தொலைவில் இருந்த இலக்கை மிகத்துல்லியமாக குறிவைத்து அடித்தான், அவனது அடுத்த அம்பு, முதல் எய்த அம்பை பிளந்து கொண்டு சென்றது. ஜென் ஆசானை திரும்பிப்பார்த்த வீரன், “இப்போது நீங்கள் இதற்கு சமமாக அம்பு எய்யுங்கள் பார்க்கலாம்” என்று நக்கலாக சொன்னான்.

காலத்தின் இறுதியொன்று

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ…