இறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள்
நானூறு வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற விஞ்ஞானியான கலிலியோ கலிலி பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேலே ஏறி இரண்டு வேறுபட்ட நிறை கொண்ட பந்துகளை கீழ்நோக்கி விட்டார். பொதுவாக நிறை கூடிய பந்து வேகமாக விழும் என பலரும் எதிர் பார்த்தனர், ஆனால் இரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் விழுவதை அவர் அவதானித்தார்.