கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.

2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.

எப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.