கவிதைகள்

  • இயற்கையின் இசை

    இயற்கையின் இசை

    தோட்டத்து குயிலிசை கேட்டேன் அது வந்த திசையினை தேடித் திரிந்தேன் நெஞ்சம் மயக்கிடும் கானம், அது குயிலின் வழி இந்த இயற்கையின் பாடம் காற்றில் கலந்தந்தக் கானம், அது காடென்றும் வீடென்றும் மயங்குவதில்லை நெஞ்சில் நிறைந்தந்தப் பாடம் மானிடர் வேற்றுமையை சொல்லிக்காட்டும் நான் உயர்வென்றும்…

  • முடிவில்லா இயற்க்கை

    முடிவில்லா இயற்க்கை

    சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய் கனவிலும் நினையா வண்ணம் இடை வளைத்து ஆடுகிறாய் கன்னங்கள் குழிவிழ சிரிக்கும் குழந்தைபோல ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்து வரும் அருவிகள் – அதன் கரைகளில் இருக்கும் கற்களில் மோதுண்ட நீர் வில்லைகள்…

  • இயற்கையின் காதல்

    இயற்கையின் காதல்

    உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக… எதிர்காலத்தின் விளிம்பிலே… நாட்களும் கடந்துவிட்டன… நேரமும் நெருங்கிவிட்டது… நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது… இரண்டாய் பிரிந்த மனதில் ஒன்று இங்கேயும் மற்றொண்டு அங்கேயுமாக அலைகிறதே… உன் நினைவிலேயே அவை…

  • அசல்போலி

    அசல்போலி

    எழுதியது – க.காண்டீபன் உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று விரட்டி, நோட்டையே புரட்டி சீ…. போ…நாயே என்றவர்கள். செத்துவிடவே சிவலோகம் அனுப்ப, கலர் கலர் மாலைகளும், அலங்காரங்களும். கூடவே! சொந்தங்கள் என்று சொல்லி நோட்டிசுகளும் பறந்து வந்தன. மிகநொந்து போன மருமகள்மார்களோ! அயன்…

  • ஒன்றிணைக்கும் அன்பில்

    ஒன்றிணைக்கும் அன்பில்

    தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை அத்தனை உயிர்ப்புடன் நோக்குகிறேன். அன்பு ஒரு பொருட்டல்ல விண் நிறைக்கும் உணர்தல் ஒவ்வொரு தனிமையிலும் வீற்றிருக்கிறது. விண்ணகி மேலும் காத்திரு அகாலம் தன்…

  • காலத்தின் இறுதியொன்று

    காலத்தின் இறுதியொன்று

    கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது. ஒரு நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால…

  • இதுவும் யாழ்… இது தான் யாழ்…

    இதுவும் யாழ்… இது தான் யாழ்…

    நல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் … அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு கிடைத்து விட்டது அதிட்டம் தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன் தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல அவர்களின்…

  • இயற்கையின் நிழல்ப்படம்

    இயற்கையின் நிழல்ப்படம்

    அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள் அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த நிழல்களும் பூமியை விட்டு…

பிரிவுகள்