எழுதியது – க.காண்டீபன்

உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று
விரட்டி, நோட்டையே புரட்டி
சீ…. போ…நாயே என்றவர்கள்.
செத்துவிடவே சிவலோகம் அனுப்ப,
கலர் கலர் மாலைகளும், அலங்காரங்களும்.
கூடவே!

சொந்தங்கள் என்று சொல்லி
நோட்டிசுகளும் பறந்து வந்தன.
மிகநொந்து போன மருமகள்மார்களோ!
அயன் குழையாத பஞ்சாப்பியுடன்,
மாமியின் தலைமாட்டில்.
பெயர் தெரியாத பேரப்பிள்ளைகளோ!
பாசத்தீயை பந்தமாக பிடித்து,
புலம்பியபடி…..

அன்னியமாகி விட்ட ஆன்மாவோ!
இக் கூத்துக்களைப் பார்த்து
அத்தனையும் அசல்போலி தான் என்றது
முருங்கையிலிருந்த படி…!

Previous articleஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை
Next articleகருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?