காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம்.
செவ்வாயில் கடலா?

செவ்வாயில் கடலா?

செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.