Posted inஉயிரியல்
புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது
புதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.
இந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.