தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு அதிகரித்த பின்னர், எல்லாத் தமிழ் தளங்களும் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்த தொடங்கியவுடனும், இயங்கு முறைமைகளும், தமிழ் ஒருங்குறியை இயல்பாக ஆதரித்ததாலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

வாசிக்க முடிந்தாலும், என்னைப் போன்றவர்களுக்குத் தமிழில் எழுதுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கில விசைப்பலகையில், தமிழில் எழுதுவதற்கு நிச்சயம் பயிற்சி வேண்டும். ஒரு அளவு வேகமாக ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப் பழகியபின்னர், மீண்டும் தமிழில் ஸ்லோவாகத் தட்டச்சுச் செய்யப் பழகுவது என்பது மிகச் சிரமமான காரியம்! நான் அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டேன்!

முடிவில்லாப் பயணம் 1 – 8

முன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு  ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா


“கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி”

பகுதி 1 

பெப்ரவரி 14, 1997

“நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை பிடிக்கிறே? கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே” குமார், கணேஷை பார்த்தவரே நின்றுகொண்டிருந்தான்.

“நீயுமாடா? உனக்கு தெரியாதா மதுவை பற்றி, சும்மா அவளை சீண்டிப் பார்க்கிறதுதானே..” என்று வடிவேலு காமடி போல பல்லைக் காட்டி சிரித்தான் கணேஷ்.

“ஒரு நாளைக்கு காண்டாகப் போறா, அன்னைக்கு இருக்குடீ உனக்கு…” என்று சொல்லியவாறே அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்த அந்த ஆறு இஞ்சுக்கு ஆறு இன்ச் சதுரவடிவான கல்லை சற்றே உள்ளுக்கு தள்ளினான் குமார். அதுவும் லாவகமாக ஒரு இன்ச் உள்ளே சென்றதும், புஸ் என சிறிய சத்ததுடன் காற்றோடு கலந்த தூசும் அந்த கல் இடுக்கில் இருந்து வெளியே வந்தது!

கணேஷின் கண் விரிய, முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை.. குமாருக்கு சொல்லவே வேண்டாம், “டேய், திறப்புக் கல்லை கண்டுபிடிச்சிடோம்!!” என்றான் குதுகலமாக!!

அதுசரி யாரிந்த குமார், கணேஷ்? அதென்ன கல்? என்ன செய்துகொண்டிருகிரார்கள்? அதை பார்க்க நாம் ஒரு சில மாதங்கள் வரை முன்னோக்கி செல்லவேண்டும். செல்வோமா?