செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்
தெற்கு வானின் ஆவிகள்
ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்
எழுதியது: சிறி சரவணா
நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா? அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா? மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும்! இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.
பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்
பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி!
எழுதியது: சிறி சரவணா
பொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நமது பிம்பத்தைப் பிரதிபலிக்கும். ஆனால் நீங்கள் வாகனங்களின் இரு புறங்களில் இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்ததுண்டா? குவிவாடி என்று அழைக்கப்படும் இவை, சற்று மேல்நோக்கி வளைந்த ஆடிகள் (கண்ணாடிக்காண அறிவியல் பதம்), வளைவில்லாத முகம்பார்க்கும் கண்ணாடிகளைப் போல அன்றி, அதைவிட அதிகளவு வீச்சுக் கொண்ட பிம்பங்களை அதானல் தோற்றுவிக்க முடியும். வாகனங்களில் இதைப் பயன்படுத்தும் நோக்கம், பின்னால் வரும் வாகனங்களை இலகுவாக அவதானிப்பதற்கு ஆகும்.
உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு
எழுதியது: சிறி சரவணா
நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.
லெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.
பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்
எழுதியது: சிறி சரவணா
பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது.
பெருவெடிப்பின் பின்னர், நீண்ட காலத்திற்கு இந்தப் பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது, அங்கே விண்மீன்கள் இல்லை, ஒளியில்லை. அந்த ஆரம்பக்காலப் பிரபஞ்சம், இருண்ட, சத்தமற்ற ஒரு வெறுமையாக இருந்தது. இந்தப் பிரபஞ்சம் தோன்றி அதில் முதல் விண்மீன்கள் உருவாக அண்ணளவாக 100 மில்லியன் வருடங்கள் எடுத்து! அதுவரை பிரபஞ்சத்தில் இருந்ததெல்லாம் வெறும் வாயுக்கள் மட்டுமே.
84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்
எழுதியது: சிறி சரவணா
இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு துல்லியத்தன்மை வாய்ந்தது!
நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன் தரத்தை “மெகாபிக்ஸல்” மூலம் அளப்போம். அதாவது “மெகாபிக்ஸல்” அதிகரிக்க அதிகரிக்க, கமெராவின் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரமும் அதிகரிக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் கமெராக்களின் சராசரி மெகாபிக்ஸல் அளவு அண்ணளவாக 10 மெகாபிக்ஸல்கள். ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் புகைப்படத்தை எடுத்த, அந்தத் தொலைக்காட்டியில் இணைக்கப்பட்டிருந்த கமெராவில் 9000 மெகாபிக்ஸல்கள் இருந்தது! அப்படியென்றால் அது எவ்வளவு துல்லியமாக அந்தப் படத்தை எடுத்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.