‘பெரும் கிழிவு’ வருகிறது!

‘பெரும் கிழிவு’ வருகிறது!

அன்று தொடங்கி இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. சிறு வயதில் இருந்ததைவிட இன்று பல பில்லியன் மடங்கு பெரிதாக இது வெளிநோக்கி விரிந்துள்ளது.
ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்?

ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்?

முதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்!
பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் UltraVISTA என்னும் கணக்கெடுப்பின் மூலம் பிரபஞ்சம் உருவாகி வெறும் 0.75 தொடக்கம் 2.1 பில்லியன் வருடங்களுக்குள் உருவாகியிருந்த பல விண்மீன் பேரடைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு

விண்மீன்கள் அற்ற ஆரம்பக்காலப் பகுதியில், விண்மீன்கள் உருவாகும் ஒரு பிரதேசத்தை ஹபிள் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் உள்ள விண்மீன்கள், பிரபஞ்சம் தோன்றி வெறும் 500 மில்லியன் வருடங்களுக்குள் உருவாகி இருக்கவேண்டும் என்று விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
அழிந்துவரும் பிரபஞ்சம்

அழிந்துவரும் பிரபஞ்சம்

புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!
பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

இப்போது இந்தப் பிரபஞ்சம் உருவாகி 14 பில்லியன் வருடங்கள் ஆகிறது, அத்தோடு இந்த வெளியில் 92 மூலகங்கள் காணப்படுகின்றன. இந்த 92 மூலகங்களால் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும் உருவாக்கப்பட்டுள்ளது, பாரிய விண்மீன்கள் தொடக்கம், சிறிய பூச்சிகள் வரை! உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் பிஸ்கட் கூட இந்த இந்த மூலகங்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்ச வில்லைகள்  – இயற்கையின் பூதக்கண்ணாடி!

பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி!

எழுதியது: சிறி சரவணா

பொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நமது பிம்பத்தைப் பிரதிபலிக்கும். ஆனால் நீங்கள் வாகனங்களின் இரு புறங்களில் இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்ததுண்டா? குவிவாடி என்று அழைக்கப்படும் இவை, சற்று மேல்நோக்கி வளைந்த ஆடிகள் (கண்ணாடிக்காண அறிவியல் பதம்), வளைவில்லாத முகம்பார்க்கும் கண்ணாடிகளைப் போல அன்றி, அதைவிட அதிகளவு வீச்சுக் கொண்ட பிம்பங்களை அதானல் தோற்றுவிக்க முடியும். வாகனங்களில் இதைப் பயன்படுத்தும் நோக்கம், பின்னால் வரும் வாகனங்களை இலகுவாக அவதானிப்பதற்கு ஆகும்.

பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

எழுதியது: சிறி சரவணா

நம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து செயப்பட்ட கணிப்புக்களே இந்த 13.8 பில்லியன் வருடங்கள் என்ற வரையரைக்குக் காரணம்.

அப்படியென்றால் அந்த 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் என்ன இருந்தது? இந்தப் பிரபஞ்சம் அப்போது எங்கே இருந்தது என்று கேள்விகள் எழும்பலாம் தானே? நிச்சயம். நீங்கள் பெருவெடிப்பு (Big Bang) என்று கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது இந்த பிரபஞ்சமானது 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகச்சிறிய புள்ளியளவு இருந்ததாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர், அதை ஒருமைப்புள்ளி (singularity) என்று அழைகின்றனர். இந்த ஒருமைப்புள்ளி அளவு இருந்தபோது, பிரபஞ்சம் மிக மிக வெப்பமானதாகவும், அளவில் அனுத்துனிக்கைகளை விட சிறிதாகவும் இருந்தது.

பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி

பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி

இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. ஆனால் அறிவியலைப் பொறுத்தவரையில் நம்பிக்கையின் அடிப்படையில் எதுவுமே முடிவு செய்யப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.