காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே
வானவில் ஒன்று அழகாக வரலாம்
தொலைத்த சொல்லை அது தேடி வரலாம்
காற்றின் தூதுவனாய் மழைத்துளியும் சேர
உதய சூரியனின் கீற்றொண்டு பட்டு
சொல் விழுந்த இடத்தை தடம் போட்டுக்காட்ட
விழுந்த சொல்லை நான் பற்றிக்கொண்டேன்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று வேண்டும்
இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டாம்
விழுந்த சொல்லை கோர்வையில் இணைத்து
இதயத்தின் படபடப்பை அமர்முடுகி வைத்து
காற்றோடு கதை பேச தயாராகிவிட்டேன்

சிறி சரவணா

படம்: இணையம்

Previous articleகவிஞர் ஆ.மு.சி.வேலழகன்
Next articleமட்டக்களப்பு வாவியின் அழகு