சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்
வெள்ளியின் மின்சாரப் புயல்
மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!
செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?
ப்ளுட்டோவிற்கு அடுத்து?
எழுதியது: சிறி சரவணா
நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.
சூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்!
இதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ! அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்!
செவ்வாயில் கடலா?
செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.