சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.
பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது.
புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றன.
மற்றைய எல்லாக் கோள்களைவிடவும், பூமி சற்று வித்தியாசமானது. இதன் மேற்பரப்பில் 70% நீரினால் மூடப்பட்டுள்ளது.
பூமியின் வளிமண்டலம் 78% நைதரசனாலும், 21% ஒக்சீசனாலும், மற்றைய 1% ஏனைய வாயுக்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாயு விகிதாசாரம், நாம் சுவாசிக்கத் தேவையான ஒரு வளிமண்டலத்தை உருவாகியுள்ளது.
பூமிக்கு ஒரு துணைக்கோள் உண்டு – சந்திரன்.
பூமியைச் சுற்றி எந்த வளையங்களும் (சனிக்குஇருப்பது போல) இல்லை.
பூமி உயிர்வாழத் தகுதியான கோளாகும். நாமறிந்து உயிர்வாழத் தகுதியான கோள் இது மட்டுமே.
பூமியின் வளிமண்டலம், வின்கற்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான வின்கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து விடுகின்றன.
பூமியில் உள்ள கண்டங்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இது பூமியின் மற்பரப்பை வடிவமைப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.